![]() |
Madhavan and Kamal Hassan |
![]() |
Kamal Hassan and Trisha |
![]() |
Madhavan, Kamal Hassan and Trisha |
![]() |
Madhavan and Kamal Hassan |
![]() |
Kamal Hassan and Trisha |
![]() |
Madhavan, Kamal Hassan and Trisha |
![]() |
Computer Techie |
Helpdesk Peoples |
சாதாரண சென்னை பையனாக இருக்கும் ஒருவன் தனக்கு என்று ஒரு பிரச்சினை என்று வந்தவுடன் எப்படி மாறுகிறான் என்பது தான் படத்தின் ஒரு வரி கதை. அதை எவ்வளவு சுவாரஸ்யமாக சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
படித்து முடித்து வேலைக்கு போகாமல், நண்பர்களுடன் ஊர் சுற்றி, தண்ணி அடித்து பாத்தாத குறைக்கு ஒரு பெண்ணை காதலித்து கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் கதை இது. ஜீவாவாக கார்த்தி, பிரியாவாக காஜல் அகர்வால். கார்த்தி தான் தோழி ஒருவரின் திருமனத்தின் போது காஜலை சந்திக்கிறார். கண்டதும் காதல். அவளிடன் தான் காதலை சொல்ல அவர் செய்யும் வேலைகள் நம்மை ரசிக்க வைக்கின்றது. இந்த காட்சிகள் இடைவேளை வரை தான். இடைவேளைக்கு அப்புறம் நாயகியை திரையில் பார்க்க முடிவதில்லை.
படத்தில் பாடல்கள் அளவோடு இருப்பது ஒரு பலமாக தோன்றுகிறது. மொத்தமே 3 பாட்டு தான் என்று நினைக்கிறேன். இடைவேளைக்கு முன் 2 பட்டு. இடைவேளைக்கு அப்புறம் ஒரு சோக பாட்டு. படத்தின் குறிப்பிடத் தக்க விஷயம் என்றாள் அது வில்லன்கள் தான். ரஜினி படத்தில் வருவது போல ஹீரோவை விட வில்லன்களுக்கு இதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. அதீத வன்முறை படத்தில் இருக்கிறது. அதனால் குழந்தைகள் இந்த படத்திற்க்கு அழைத்து செல்வது கேள்விக்குறியே.
வில்லனின் நண்பன் ஒருவன் தான் காதலிக்கும் பெண் ஒருவரை கடத்தி திருமணம் செய்ய நினைத்து தன்னுடைய வில்லன் நண்பனிடன் உதவி கேட்கிறான். அவர்கள் அந்த பெண்ணை கடத்த ஒரு கால் டாக்ஸி எடுக்கிறார்கள். அந்த கால் டாக்ஸி டிரைவர் தான் கார்த்தியின் அப்பா ஜெயப்ரகாஷ். இந்த விஷயம் தெரிந்த அவர் இதற்க்கு தன்னால் உதவி செய்ய முடியாது என்று சொல்லி விடுகிறார். ஒருவழியாக அவரை சமாளித்து வரும் அவர்கள், அந்த பெண்ணையும் அந்த பையனையும் தங்களுடைய அறையில் தங்க வைக்கிறார்கள்.
சபல புத்தி உடைய ஒரு நண்பர் அந்த காதலர்களுக்குள் நடக்குக்ம் காசமுசாவை பார்த்து இவனுக்கு மூடு மாற அந்த பெண்ணை கற்பழித்து சண்டைக்கு வந்த அந்த பெண்ணின் காதலனையும் கொலை செய்கிறார்கள். பிணத்தை துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசி விடுகிறார்கள். இந்த கொலைக்கு சாட்சி என்று வந்தால் அது டாக்ஸி டிரைவர் ஜெயப்பர்காஷாக தான் இருக்க முடியும் என்று அவரையும் கொலை செய்ய நினைத்து கொலையும் செய்து விடுகிறார்கள்.
பிறகு நாயகன் நாயகன் இவர்களை கண்டுபிடித்து பழி வாங்குவதே கதை.
இந்த படத்தில் லாஜிக் எதிர்பார்ப்பது தப்பு என்று எனக்கு தெரியும். இருந்தாலும் அதை ( லாஜிக்கை )எழுப்பி விட்ட காட்சி என்றால் அது கிளைமாக்ஸ் இல் வரும் சண்டை காட்சி தான். தொழில் முறை தாதாவாக இருக்கும் ஒருவரையும் அவருடைய அடியாள்களையும் அசாதாரணமாக கொலை செய்யும் வில்லன்கள், ஏனோ ஹீரோவிடம் அநியாத்துக்கு அடி வாங்கி சாகிறார்கள். இதை தவிர மத்தபடி எனக்கு எந்த பெரிய ஓட்டையும் என்னோட கண்ணுக்கு தெரியவில்லை.
ஒரு வேலை உங்களுக்கு நேரம் இருந்தால் இந்த படத்தை போயி பாருங்க... மத்த படி வேற ஒண்ணும் பெரிய விஸேஷம் இல்லை படத்தில்.
சென்னையில் மிதிவண்டிகளுக்கு என்று தனியே பிரத்யேக பாதை அமைக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதற்க்கு சோதனை அடிப்படையில் முதலில் இந்த திட்டம் அண்ணா நகர் பகுதியில் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது.
வாகன நெரிசல் மிகுந்த சென்னை மாநகரத்தில் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்களுக்கே இங்கு வழி இல்லாது இருக்கும் போது, மிதிவண்டி ஓட்டுனர்களின் பாடு சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதிலும் நமது ஆட்டோ ஓட்டுனர்களின் அத்கலத்தால் பாதி விபத்துகள் நிகழ்வாதாக பலர் சொல்வதுண்டு. இந்நிலையில் மிதிவண்டி ஓட்டுனர்களுக்கு என்று தனி பாதை அமைப்பது என மாங்கராசி நிர்வாகம் முடிவு செய்துள்ளது வரவேற்க்க தக்கது.
ஆனாலும் நம்மா ஆளுங்களுக்கு ரொம்ப தான் லொள்ளு ஜாஸ்தி. ஏதோ சின்ன பசங்க த்ரிஷா பிறந்தநாளுக்கு பேனர் வச்சிருந்தாலும் பரவா இல்லை, 1958இல் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் என்று சொல்லி நடிகை திரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து பேனர் வச்சிருக்காங்க. சிறுசுகளை நாம குத்தம் சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சம் இதையும் நாம் பார்க்க வேண்டும்
நண்பனின் லொள்ளு
ஒரு வருசத்துக்கு முன்னாடி இந்தியாவுல இருந்தப்போ செலவுக்கு காசு இல்லைன்னு என்னோட நண்பன் கிட்ட போயி "டேய் மச்சி செலவுக்கு கைல காசு இல்ல, ஒரு பத்து ரூவா இருந்த குடேன்" அப்புடீண்ணு கேட்டேன். அதுக்கு என்னை அவன் மொரச்சு பாத்திட்டு தீட்டி இருந்தாலும் பரவா இல்லை. அதை விட கேவலமா ஒண்ணு சொல்லிட்டான். அதை இன்று வரை என்னால் ஜீரணம் செய்ய முடியவில்லை.
அவன் சொன்னது :- திடீர்ன்னு இவ்வளவு பெரிய அமெளண்ட் கேட்ட நான் எங்கட போவேன்... ( நாயகன் படத்துல வர்ற பின்னணி இசைய நீங்க மனசுல நெனச்சு மருக்கா ஒரு தடவ படிங்க அவன் சொன்னத...)
என்னுடைய அதிமேதாவித்தனம்...
நான் என்னுடைய வீட்டுக்கு அப்பா அம்மாவோட தினமும் ஸ்கைப்-இல் பேசுவது வழக்கம். என் கிட்ட இங்க இருக்குறது 1MBPS கனெக்ஷன், எங்க வீட்ல இருக்குறதோ 256KBPS பிஎஸ்என்எல் கனெக்ஷன், மாசம் 2.5GB அளவு.. இதனால என்னோட வீடியோ அவங்களுக்கு ஓரளவு நல்லா தெரியும், ஆனா அவங்களோட வீடியோ எனக்கு இங்க ரொம்ப மோசமா தெரியும். இதை சரி பன்றதுக்காக அப்பா கிட்ட சொல்லி 1MBPS கனெக்ஷன் வாங்கிக்கொங்க அப்புடீண்ணு சொன்னேன். சரி வங்கிக்கிறேண்ணு சொல்லிட்டு என்கிட்ட வந்து இந்த 1எம்பிபிஎஸ் அப்புறம் 256கேபிபிஎஸ் இதை பத்தி கொஞ்சம் சொல்லு, அப்புறம் இப்போ இந்த 1எம்பிபிஎஸ் கனெக்ஷன் வாங்குறதுனாளா நமக்கு என்ன லாபம்... " அப்புடீண்ணு கேட்டாரு...
எங்க அப்பா படிச்சது 5வது வரை தான், இப்போ நான் அவருக்கு புரியுற மாதிரி ஒரு விளக்கம் கொடுக்கணும். அவருக்கு டெக்னிகல் டீடெயில்ஸ் சொன்னா புரியாது. இதை எப்புடி விளக்குறதுண்ணு ஒரே குழப்பம் எனக்கு. டிங்குனு மணி அடிச்சா மாதிரி ஒரு ஐடியா வந்தது.
அப்பா, இப்போ நம்ம வீட்டுக்கு மேல டேங்க் இருக்குதுள்ள, அதோட கொள்ளளவு 20 லிட்டர்ண்ணு வச்சுகொங்க. அதுல இருந்து நாம தண்ணி தினமும் 2 இன்ச் குழாய் மூலமா புடிக்கிறோமா... தண்ணி நமக்கு ரொம்ப மெதுவா வருதுண்ணு சொல்லி நாம இப்போ அந்த 2 இன்ச் குழாயை 4இன்ச் குழாயாக மாத்தூனா தன்னியோட வேகம் அதிகமா இருக்குமுல்ல, அதே வேலையை தான் இங்கயும் பன்றோம். நாம குழாயை தான் மாத்துறோம். ஆனா டேங்கின் கொள்ளளவு அதேன் 20 லிட்டர் தான்.
இப்போ நான் மேல சொன்னதை இங்கே இன்டெர்நெட் கனெக்ஷன்க்கு ஒப்பிட்டால் நாம மாசம் யூஸ் பண்ண வேண்டிய அளவு 2.5ஜிபி அதாவது டேங்க் அளவு. இப்போ அந்த 2.5ஜிபி அளவை நாம 256கேபிபிஎஸ் குழாய் மூலமா புடிச்சிக்கிட்டு இருக்குறோம், அதை மாத்தி தான் நாம இப்போ 1எம்பிபிஎஸ் என்கிற பெரிய குழாய் போட போறோம். தண்ணியும் ( Buffer Speed ) வேகமா வரும் அதே நேரம் நாம முன்னாடி செலுத்துன அதே அளவு தொகையை இதுக்கு செலுத்துனா போதும். அவ்வளவு தான் சிம்பிள். பக்கத்துல என்னோட தங்கச்சி இதை கேட்டுகிட்டு இருந்தா... ஒரு சிரிப்பு சிரிச்சீட்டு போய்ட்டா...
இன்னைக்கு இத்தோட போதுமுன்னு நெனைக்குறேன். நெக்ஸ்ட் மீட் பன்றேன்...