Tuesday, July 13, 2010

சென்னையில் விரைவில் மிதிவண்டிக்கு தனி வழி

சென்னையில் மிதிவண்டிகளுக்கு என்று தனியே பிரத்யேக பாதை அமைக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதற்க்கு சோதனை அடிப்படையில் முதலில் இந்த திட்டம் அண்ணா நகர் பகுதியில் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

bike02

வாகன நெரிசல் மிகுந்த சென்னை மாநகரத்தில் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்களுக்கே இங்கு வழி இல்லாது இருக்கும் போது, மிதிவண்டி ஓட்டுனர்களின் பாடு சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதிலும் நமது ஆட்டோ ஓட்டுனர்களின் அத்கலத்தால் பாதி விபத்துகள் நிகழ்வாதாக பலர் சொல்வதுண்டு. இந்நிலையில் மிதிவண்டி ஓட்டுனர்களுக்கு என்று தனி பாதை அமைப்பது என மாங்கராசி நிர்வாகம் முடிவு செய்துள்ளது வரவேற்க்க தக்கது.

Saturday, July 10, 2010

இன்டெர்நெட் இணைப்பும் மாசக் கடைசியும்...

ஆனாலும் நம்மா ஆளுங்களுக்கு ரொம்ப தான் லொள்ளு ஜாஸ்தி. ஏதோ சின்ன பசங்க த்ரிஷா பிறந்தநாளுக்கு பேனர் வச்சிருந்தாலும் பரவா இல்லை, 1958இல் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் என்று சொல்லி நடிகை திரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து பேனர் வச்சிருக்காங்க. சிறுசுகளை நாம குத்தம் சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சம் இதையும் நாம் பார்க்க வேண்டும்

34849_133977886634774_100000676910666_206315_5656851_n

நண்பனின் லொள்ளு

ஒரு வருசத்துக்கு முன்னாடி இந்தியாவுல இருந்தப்போ செலவுக்கு காசு இல்லைன்னு என்னோட நண்பன் கிட்ட போயி "டேய் மச்சி செலவுக்கு கைல காசு இல்ல, ஒரு பத்து ரூவா இருந்த குடேன்" அப்புடீண்ணு கேட்டேன். அதுக்கு என்னை அவன் மொரச்சு பாத்திட்டு தீட்டி இருந்தாலும் பரவா இல்லை. அதை விட கேவலமா ஒண்ணு சொல்லிட்டான். அதை இன்று வரை என்னால் ஜீரணம் செய்ய முடியவில்லை.

India10Rupees

அவன் சொன்னது :- திடீர்ன்னு இவ்வளவு பெரிய அமெளண்ட் கேட்ட நான் எங்கட போவேன்... ( நாயகன் படத்துல வர்ற பின்னணி இசைய நீங்க மனசுல நெனச்சு மருக்கா ஒரு தடவ படிங்க அவன் சொன்னத...)

என்னுடைய அதிமேதாவித்தனம்...

நான் என்னுடைய வீட்டுக்கு அப்பா அம்மாவோட தினமும் ஸ்கைப்-இல் பேசுவது வழக்கம். என் கிட்ட இங்க இருக்குறது 1MBPS கனெக்ஷன், எங்க வீட்ல இருக்குறதோ 256KBPS பிஎஸ்என்எல் கனெக்ஷன், மாசம் 2.5GB அளவு.. இதனால என்னோட வீடியோ அவங்களுக்கு ஓரளவு நல்லா தெரியும், ஆனா அவங்களோட வீடியோ எனக்கு இங்க ரொம்ப மோசமா தெரியும். இதை சரி பன்றதுக்காக அப்பா கிட்ட சொல்லி 1MBPS கனெக்ஷன் வாங்கிக்கொங்க அப்புடீண்ணு சொன்னேன். சரி வங்கிக்கிறேண்ணு சொல்லிட்டு என்கிட்ட வந்து இந்த 1எம்பிபிஎஸ் அப்புறம் 256கேபிபிஎஸ் இதை பத்தி கொஞ்சம் சொல்லு, அப்புறம் இப்போ இந்த 1எம்பிபிஎஸ் கனெக்ஷன் வாங்குறதுனாளா நமக்கு என்ன லாபம்... " அப்புடீண்ணு கேட்டாரு...

images

எங்க அப்பா படிச்சது 5வது வரை தான், இப்போ நான் அவருக்கு புரியுற மாதிரி ஒரு விளக்கம் கொடுக்கணும். அவருக்கு டெக்னிகல் டீடெயில்ஸ் சொன்னா புரியாது. இதை எப்புடி விளக்குறதுண்ணு ஒரே குழப்பம் எனக்கு. டிங்குனு மணி அடிச்சா மாதிரி ஒரு ஐடியா வந்தது.

அப்பா, இப்போ நம்ம வீட்டுக்கு மேல டேங்க் இருக்குதுள்ள, அதோட கொள்ளளவு 20 லிட்டர்ண்ணு வச்சுகொங்க. அதுல இருந்து நாம தண்ணி தினமும் 2 இன்ச் குழாய் மூலமா புடிக்கிறோமா... தண்ணி நமக்கு ரொம்ப மெதுவா வருதுண்ணு சொல்லி நாம இப்போ அந்த 2 இன்ச் குழாயை 4இன்ச் குழாயாக மாத்தூனா தன்னியோட வேகம் அதிகமா இருக்குமுல்ல, அதே வேலையை தான் இங்கயும் பன்றோம். நாம குழாயை தான் மாத்துறோம். ஆனா டேங்கின் கொள்ளளவு அதேன் 20 லிட்டர் தான்.

இப்போ நான் மேல சொன்னதை இங்கே இன்டெர்நெட் கனெக்ஷன்க்கு ஒப்பிட்டால் நாம மாசம் யூஸ் பண்ண வேண்டிய அளவு 2.5ஜிபி அதாவது டேங்க் அளவு. இப்போ அந்த 2.5ஜிபி அளவை நாம 256கேபிபிஎஸ் குழாய் மூலமா புடிச்சிக்கிட்டு இருக்குறோம், அதை மாத்தி தான் நாம இப்போ 1எம்பிபிஎஸ் என்கிற பெரிய குழாய் போட போறோம். தண்ணியும் ( Buffer Speed ) வேகமா வரும் அதே நேரம் நாம முன்னாடி செலுத்துன அதே அளவு தொகையை இதுக்கு செலுத்துனா போதும். அவ்வளவு தான் சிம்பிள். பக்கத்துல என்னோட தங்கச்சி இதை கேட்டுகிட்டு இருந்தா... ஒரு சிரிப்பு சிரிச்சீட்டு போய்ட்டா...

இன்னைக்கு இத்தோட போதுமுன்னு நெனைக்குறேன். நெக்ஸ்ட் மீட் பன்றேன்...

Friday, July 9, 2010

கொழும்பு ஐ நா அலுவலகம் மூடல்

இலங்கை தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்திய இன அழிப்பு போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மாண்டது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் விடுதலைப்ப் புலிகளை அளிக்கின்ற சாக்கில் இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகளில் அப்பட்டமான மனித உரிமை மீறல் இருப்பதை சர்வதேச சமூகம் ( இந்தியா தவிர ) ஐ நா விடம் புகாரக அளித்தது. இந்த புகாரை விசாரிக்கும் பொருட்டு ஐ நா பொது செயலாளர் திரு பான் கீ மூன் அவர்கள் மூவர் அடங்கிய விசாரணை குழு ஒன்றை அமைத்து உள்ளார்.

இந்த விசாரணை குழு தனது விசாரணையை துவக்கும் முன்னே இதை தடுக்கும் நோக்கத்துடன் இலங்கை அரசு தனது உள் வேலைகளை ஆரம்பித்து விட்டது. ஆளும் கட்சியின் அமைச்சர் பதவியில் இருக்கும் ஒரு நபரே ஐ நாவை எதிர்த்து போராடும் பணியில் இறங்கியுள்ளார்..

எங்கே தான் செய்த தவறுகள் வெளியில் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் இலங்கை அரசு மேற்கொள்ளும் இந்த செயல்களானது தனக்கு தானே வைத்துக் கொள்ளும் ஆப்பாக மாறி இருக்கிறது இப்பொழுது. போர் குற்றங்கள் உண்மையிலையே நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று இதற்க்கு முன் மறுத்த நாடுகளுக்கும் ஒத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திருக்கு இந்த செயலால் தள்ளப்பட்டு உள்ளன.

இதை தொடர்ந்து கொழும்பில் உள்ள ஐ நா அலுவலகத்தின் பாதுகாப்பிற்க்கு இலங்கை அரசாங்கமே பொறுப்பு எடுத்துக் கொள்ளாத நிலையில் அதை மூடுவதே சிறந்தது என்று திரு பான் கீ மூன் முடிவு செய்து விட்டார். இதன் மூலம் இந்த பிரச்சினை சர்வதேச சமூகத்தின் கவனத்தைப் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.