Showing posts with label என் திரை பார்வை. Show all posts
Showing posts with label என் திரை பார்வை. Show all posts

Saturday, July 9, 2011

அவன் இவன் - என் பார்வை



பொதுவா இந்த மாதிரி கதைகளில் ரெண்டு ஹீரோக்களில் ஒரு ஹீரோ திடீர்ன்னு வில்லனாகி மத்தவங்களுக்கு டார்ச்சர் கொடுத்து, அதை மெயின் ஹீரோ சமாளித்து வெளியில் வர்றதுன்னு போகும்...  ஆனா இங்க ரெண்டு பேருமே வெறும் சப்பையா முதல் பாதி படத்தை போக்குரத தவிர வேற எதுவும் உருப்படியா பன்னதா தெரியல...

அதிலும் அவங்க ரெண்டு பேருக்கும் அமைக்கப்பட்ட காதல் காட்சிகள், தமிழ் சினிமாவில் இதுக்கு மேல காதல் காட்சி எடுக்க முடியாது என்பதை சொல்லாமல் சொல்லுது... அந்த அளவுக்கு வறட்சி... 

சரி, அது தான் இல்லைன்னு ஆகி போச்சே, அப்புடீன்னா இவங்க ரெண்டு பேரை தவிர ஒரு பெரிய வில்லன் அநேகமாக ஹைனஸ் வருவான்னு நானும் முக்காவாசி படம் வரைக்கும் வெயிட் பண்ணா... திடீர்ன்னு நம்ம JK எண்டர் ஆகி மாடு பத்துராறு... அந்த ஆளு உள்ள வந்த உடனே பாதி டயர்ட் ஆகி போச்சு... எப்புடியும் இவன் தான் கிளைமாக்ஸ்-ல வந்து சாக போரான்னு தெரிஞ்சதால... 

சரி, அதுக்குள்ள ஹைனஸ் கேரக்டர் வில்லனா மாறி, ஹீரோக்களின் சாகசங்களால் அவரு கடைசி திருந்தி மனம் வருந்தி, அந்த நேரத்துல நம்ம JK உள்ள நொலஞ்சு தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதியாம் கிளைமாக்ஸ்-இல் ஃபைட் வைக்கும் மரபை செய்வார்ன்னு பாத்தா... 

படிக்கிற உங்களுக்கே டயர்ட்-ஆ இருந்தா, எழுதுன எனக்கு எவ்வளவு கடுப்பா இருக்கும்... போயி புள்ள குட்டிங்கள படிக்க வைங்க... 

Wednesday, December 29, 2010

மன்மதன் அம்பு

கடைசியா நானும் இந்த படத்தை பாத்துட்டேன். நான் பண்ணின ஒரே தப்பு பஞ்சதந்திரம், பம்மல் உவ்வே சம்பந்தம் மற்றும் தெனாலி அளவுக்கு எதிர்பாத்தது தான்.பம்மலைத் தவிர்த்து மீதி இரண்டும் கமல் மற்றும் ரவிக்குமார் ஜோடி கலக்கி இருந்தார்கள். இதில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறார்களா என்றால் கசப்புடன் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 

கதை இந்நேரம் நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியணும்னு அவசியம் இல்லை. பாதி வலைப்பதிவர்கள் கிழித்து தொங்கப்போட்டு இருப்பார்கள். இருந்தாலும் விட்ற மாதிரி இல்லை நான். நல்ல டைமிங்கோட ஒரு ரைஹ்மிங்கோட சொல்றேன் கேளுங்க... ( வசன உதவி அநேகமாக சிங்கமுத்து-தலைநகரம் படத்திலிருந்து ) 

Madhavan and Kamal Hassan
ஓய்வு பெற்ற ராணுவ தளபதி கமல்,  தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரின் புற்று நோய் சிகிச்சைக்காக பணம் ஈட்டும் பொருட்டு தொழிலதிபர் மாதவன் சொல்லும் ஒரு உளவாளி வேலைக்கு ஒத்துக்கொள்கிறார். தான் காதலிக்கும் திரைப்பட நடிகையின் பழக்க வழக்கங்களின் மேல் சந்தேகம் கொள்ளும் மாதவன், அதை உறுதிப்படுத்தி கொள்வதர்க்காக கமலை அனுப்புகிறார். ஆரம்பத்தில் இருந்தே கொடுத்த வேலையை செவ்வனே செய்யும் கமல், திரிஷா ஒரு "நல்ல பெண்" என்று மாதவானிடம் சான்றிதழ் வழங்குகிறார். 

Kamal Hassan and Trisha
தான் நம்பிய விஷயம் ( திரிஷாவுக்கு வேறு ஒருவருடன் கள்ள உறவு ) மற்றவர்கள் பொய் என்று சொல்வதை ஏற்கின்ற மனமில்லாத மாதவன் "நல்லவளை நல்லவள் என்று சொல்வதற்க்கு உனக்கு எதுக்கு கூலி" என்று நினைத்து, கமலுக்கு பேசிய பணத்தை கொடுக்க மறுத்து நாடு திரும்பும்படி கூறுகின்றார். மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நண்பனை காக்க இந்த பணம் அவசியம் என்பதால், தான் வேலை முடித்து விமான நிலையத்துக்கு திரும்பும் பாதையில் த்ரிஷாவை வேறு ஒருவருடன் பார்த்ததாக பொய்யுறைக்கும் கமல், தன் பணம் கிடைக்கும் வரை இந்த பொய்யை தொடர முடிவு செய்து... அதன் பிரதி பலன்களே மீதி... 

இதன் நடுவில் த்ரிஷா தான் எதிர்பாக்கும் அத்தனை புருஷலட்சணமும் கமலிடம் இருப்பதாக நம்பி அவரை காதலிக்க தொடங்க... மாதவனின் காதல் பப்படம் ஆகிறது. அதை சரிக்கட்ட இன்னொரு கேரக்டர் இருக்கின்றது படத்தில்... முடிஞ்சா நீங்களே கண்டுபுடிங்க... நடுவில் கமலுக்கென்று ஒரு ஃபிளாஷ்பேக். அது வெறும் ஒரு பாட்டுக்கும், கமல் மீதான த்ரிஷாவின் காதலுக்கும் சற்று உரம் சேர்க்கும் படி அமைந்திருக்கின்றது. 

Madhavan, Kamal Hassan and Trisha
என்னடா இவ்வளவு கதை சொன்னவன் முக்கியமான விஷயத்தை சொல்லாமலே போய்ட்டானேன்னு பாக்குறீங்களா... அது மட்டுமாவது இனிமே இந்த விமர்சனம் படிச்சிட்டு போறவங்களுக்கு ஒரு சர்ப்ரைஸாக இருக்கட்டுமே என்று நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உங்களுக்கு நேரம் இருந்து படம் பார்ப்பதற்க்கு ஒரு நல்ல துணை (ஃபிரண்ட்ஸ்-ன்னு கூட வச்சிக்கலாம்) இருந்து, காசும் கையில இருந்தால் தாராளமாக இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம். 

பின் குறிப்பு :- பஞ்ச தந்திரம் மற்றும் பம்மல் முதன் முறை திரை அரங்கிர்க்கு சென்று பார்த்தபோது சரியாக அதிலுள்ள காமெடி-கள் புரியாமல் போனதால் என்னால் அவ்வளவு ஆழமாக ரசிக்க முடியவில்லை. ஆனால் அதற்க்கு அப்பறம் ரொம்ப புடிச்சு போனது வேற விஷயம். ஆனா இதில் அதற்கான முகாந்திரம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒரு வேலை கிரேஸி மோகனுக்கு மட்டுமே வாய்த்த வாய்ப்பாக இருக்கலாம். 

Saturday, December 4, 2010

சிக்கு புக்கு - டயர் பஞ்சர் ஆயிடுச்சு

    ஆர்யாவை நம்பி படத்துக்கு போனதுக்கு எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்... படம் ஆரம்பித்து ஒரு மணி நேரம் உள்ளே இருந்தாலே பெரிய விஷயம். சரி பாத்தாச்சு, அப்புடியே விமர்சனம் போட்டுடலாம்னு வந்தேன்... 


ஆர்யா ஷ்ரேயா... லண்டன் வாழ் இளைஞ இளைஞிகள். இவங்க தன்னுடைய சில சொந்த பிரச்சினைகளுக்காக இந்தியா வர, வந்த இடத்தில் பெங்களூர்-ல்இருந்து மதுரை செல்ல வேண்டிய விமானம் ரத்தாக, தரை மார்க்கமாக மதுரை செல்ல முடிவு செய்து புறப்படுகிறார்கள்... இவங்க மதுரை போயி சேருவதர்க்குள் நடைபெறும் காப்ராக்களே, திரைப்படம். 

நடுவில் அப்பா ஆர்யாவினுடைய காதல் டிராக் வேறு தனியாக செல்கின்றது. அந்த கதை ஏன் தான் வருகிறதென்றே தெரியவில்லை. அப்புடி வந்தாலும் கடைசியில் ஒரு ட்விஸ்ட் வச்சாறு பாருங்க டைரடக்கரு... நான் அப்புடியே மெர்சல் ஆயிட்டேன்... அப்பா ஆர்யா கதாபாத்திரம் கிளைமாக்ஸ்-யில் ஒண்ணும் இல்லாத விசயத்துக்காக படம் முழுக்க காட்டப் பட்டது தான் கொடுமை. அதுக்கு பதிலா அந்த கதாபத்திரைத்தே வைத்து ஒரு சுவையான கதையை சொல்லி இருக்கலாம். 


படத்துல வர எல்லா காட்சிகளும் சரியான ஸ்லோ அப்புறம் எளிதில் கணிக்க கூடியதா இருக்குது. அப்புறம் படத்தோட ஒரு பெரிய பலவீனம் பாடல்கள். 

மதராசபட்டினம் மாதிரி பழைய காலத்து கதைன்னு சொன்ன உடனே நம்ம ஆளு சரின்னு சொல்லிட்டாறு போல... 

அண்ணே சந்தானம் பழைய படங்களில் வருவது போல, படத்திற்க்கு சிறிதும் சம்பந்தமே இல்லாத தனி டிராக் காமெடியாக வந்து செல்கின்றார். அதுவும் ஒண்ணும் சிறப்பாக இல்லை. ஒரு வேலை பாஸ் (எ) பாஸ்கரன்-யில் இவருடைய அதீத பங்கினால் தான் படம் வெற்றியடைந்ததால் இதில் வேண்டுமென்றே காட்சிகளை குறைத்து விட்டார்களோ என்னவோ ? யாருன்னு நான் தான் சொல்லி உங்களுக்கு தெரியனுமா ?  



ஷ்ரேயா... இந்த அம்மா சந்தோஷ் சுப்ரமணியம் படத்தை நெறைய தடவை பாத்துட்டாங்கன்னு நினைக்குறேன். ஜெனீலியா-வின் அட்டு காப்பியாக படம் முழுவதும் வலம் வருகிறார். 

ஒரு வேளை உங்களுக்கு இந்த படத்தை தியேட்டர் போயி பாக்க முடியலைன்னா, இடைவேளை வரை ஜப் வீ மேட்-ஐயும் அதாங்க கண்டேன் காதலையும், இடைவேளைக்கு அப்புறம் புதுக்கோட்டையிலிருந்து சரவணனும்... கிளைமாக்ஸ்-க்கு குட்டி இல்லைன்னா ஏதாவது ஒரு தமிழ் படத்தையும் பாத்துக்குங்க... 

முடியல... அப்புறமா வர்றேன்... 

டிஸ்கி:- என் நண்பர் Unstoppable இல்லைன்னா ரத்த சரித்திரம் பாக்கலாம்னு சொன்னாரு, நான் தான் அவரை வம்படியா இந்த படத்துக்கு கூட்டிட்டு போனேன். பாதி படத்துலையே என்னை அவரு கெட்ட வார்த்தைல திட்ட ஆரம்பிச்சிட்டாரு. என்னத்த சொல்றது போங்க... 

இந்த காயத்தை ஆற்ற நாளைக்கு ரத்த சரித்திரம்... 

இண்ட்லி மற்றும் தமிழ்மனத்துல ஓட்டு போடுங்க... அது உங்க கடமை... 

Sunday, August 22, 2010

நான் மகான் அல்ல - என் பார்வை

சாதாரண சென்னை பையனாக இருக்கும் ஒருவன் தனக்கு என்று ஒரு பிரச்சினை என்று வந்தவுடன் எப்படி மாறுகிறான் என்பது தான் படத்தின் ஒரு வரி கதை. அதை எவ்வளவு சுவாரஸ்யமாக சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

Naan-Mahaan-Alla-wallpaper

படித்து முடித்து வேலைக்கு போகாமல், நண்பர்களுடன் ஊர் சுற்றி, தண்ணி அடித்து பாத்தாத குறைக்கு ஒரு பெண்ணை காதலித்து கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் கதை இது. ஜீவாவாக கார்த்தி, பிரியாவாக காஜல் அகர்வால். கார்த்தி தான் தோழி ஒருவரின் திருமனத்தின் போது காஜலை சந்திக்கிறார். கண்டதும் காதல். அவளிடன் தான் காதலை சொல்ல அவர் செய்யும் வேலைகள் நம்மை ரசிக்க வைக்கின்றது. இந்த காட்சிகள் இடைவேளை வரை தான். இடைவேளைக்கு அப்புறம் நாயகியை திரையில் பார்க்க முடிவதில்லை.

படத்தில் பாடல்கள் அளவோடு இருப்பது ஒரு பலமாக தோன்றுகிறது. மொத்தமே 3 பாட்டு தான் என்று நினைக்கிறேன். இடைவேளைக்கு முன் 2 பட்டு. இடைவேளைக்கு அப்புறம் ஒரு சோக பாட்டு. படத்தின் குறிப்பிடத் தக்க விஷயம் என்றாள் அது வில்லன்கள் தான். ரஜினி படத்தில் வருவது போல ஹீரோவை விட வில்லன்களுக்கு இதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. அதீத வன்முறை படத்தில் இருக்கிறது. அதனால் குழந்தைகள் இந்த படத்திற்க்கு அழைத்து செல்வது கேள்விக்குறியே.

naanmahaanalla230610_15

வில்லனின் நண்பன் ஒருவன் தான் காதலிக்கும் பெண் ஒருவரை கடத்தி திருமணம் செய்ய நினைத்து தன்னுடைய வில்லன் நண்பனிடன் உதவி கேட்கிறான். அவர்கள் அந்த பெண்ணை கடத்த ஒரு கால் டாக்ஸி எடுக்கிறார்கள். அந்த கால் டாக்ஸி டிரைவர் தான் கார்த்தியின் அப்பா ஜெயப்ரகாஷ். இந்த விஷயம் தெரிந்த அவர் இதற்க்கு தன்னால் உதவி செய்ய முடியாது என்று சொல்லி விடுகிறார். ஒருவழியாக அவரை சமாளித்து வரும் அவர்கள், அந்த பெண்ணையும் அந்த பையனையும் தங்களுடைய அறையில் தங்க வைக்கிறார்கள்.

சபல புத்தி உடைய ஒரு நண்பர் அந்த காதலர்களுக்குள் நடக்குக்ம் காசமுசாவை பார்த்து இவனுக்கு மூடு மாற அந்த பெண்ணை கற்பழித்து சண்டைக்கு வந்த அந்த பெண்ணின் காதலனையும் கொலை செய்கிறார்கள். பிணத்தை துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசி விடுகிறார்கள். இந்த கொலைக்கு சாட்சி என்று வந்தால் அது டாக்ஸி டிரைவர் ஜெயப்பர்காஷாக தான் இருக்க முடியும் என்று அவரையும் கொலை செய்ய நினைத்து கொலையும் செய்து விடுகிறார்கள்.

naanmahaanalla230610_18

பிறகு நாயகன் நாயகன் இவர்களை கண்டுபிடித்து பழி வாங்குவதே கதை.

இந்த படத்தில் லாஜிக் எதிர்பார்ப்பது தப்பு என்று எனக்கு தெரியும். இருந்தாலும் அதை ( லாஜிக்கை )எழுப்பி விட்ட   காட்சி என்றால் அது கிளைமாக்ஸ் இல் வரும் சண்டை காட்சி தான். தொழில் முறை தாதாவாக இருக்கும் ஒருவரையும் அவருடைய அடியாள்களையும் அசாதாரணமாக கொலை செய்யும் வில்லன்கள், ஏனோ ஹீரோவிடம் அநியாத்துக்கு அடி வாங்கி சாகிறார்கள். இதை தவிர மத்தபடி எனக்கு எந்த பெரிய ஓட்டையும் என்னோட கண்ணுக்கு தெரியவில்லை.

ஒரு வேலை உங்களுக்கு நேரம் இருந்தால் இந்த படத்தை போயி பாருங்க... மத்த படி வேற ஒண்ணும் பெரிய விஸேஷம் இல்லை படத்தில்.

Saturday, May 29, 2010

சுறா - லேட் விமர்சனம்

என்னடா படம் வந்து ஒரு மாசாத்துக்கும் மேல ஆச்சே. இப்போ விமர்சனம் போடுறானெண்ணு பாக்கதீங்க....
பதிவுலகில் நம்ம ஆளுங்க குடுத்த விம்ர்சாணங்களா படிச்சிட்டு மெதுவா ஓசியில முடிஞ்ச பாத்துக்லாம்னு விட்டுட்டேன். நேத்து தான் இந்த காவியத்தை காணும் பாக்கியம் பெற்றேன். தன்யன் ஆனேன்.

Monday, February 8, 2010

அசல் - என் பார்வையில்...



படம் டிரைலர் எல்லாம் சூப்பரா இருந்துது. அஜித் நடை உடை எல்லாம் நல்லா இருந்தது. அப்பறம்  டொட்டோடைங்க் பாட்டும் நல்லா இருந்தது. எல்லாத்தையும்  சேர்த்து ஒரு எதிர்பார்போட போனேன் படத்துக்கு. என்னுடைய எதிர் பார்ப்பு நிறைவேறியதா என்றால்


Monday, January 18, 2010

ஆயிரத்தில் ஒருவன்

டிஸ்கி :- இது ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் அல்ல. விமர்சனம் பண்ற அளவுக்கு எல்லாம் நான் ஒன்னும் பெரிய ஆள் கிடையாது. இது என்னுடைய பார்வை இந்த திரை படத்தை பற்றி.


நேத்து தான் ( ஞாயிறு ) போய் இந்த படத்த நண்பர் ஒருவருடன் காண கிடைத்தது. படம் ஆரம்பத்தில் இருந்து கொஞ்சம் தொய்வாக போய்கொண்டு இருந்தாலும் ஒரு 20 நிமிடதிருக்கு பிறகு ஓரளவுக்கு நிமிர்ந்து உக்கார செய்கின்றார் இயக்குனர்.