Saturday, July 9, 2011
அவன் இவன் - என் பார்வை
Wednesday, December 29, 2010
மன்மதன் அம்பு
![]() |
| Madhavan and Kamal Hassan |
![]() |
| Kamal Hassan and Trisha |
![]() |
| Madhavan, Kamal Hassan and Trisha |
Saturday, December 4, 2010
சிக்கு புக்கு - டயர் பஞ்சர் ஆயிடுச்சு
Friday, December 3, 2010
IT Jokes - தகவல் தொழில்நுட்ப சுவையான சம்பவங்கள்
![]() |
| Computer Techie |
| Helpdesk Peoples |
Sunday, August 22, 2010
நான் மகான் அல்ல - என் பார்வை
சாதாரண சென்னை பையனாக இருக்கும் ஒருவன் தனக்கு என்று ஒரு பிரச்சினை என்று வந்தவுடன் எப்படி மாறுகிறான் என்பது தான் படத்தின் ஒரு வரி கதை. அதை எவ்வளவு சுவாரஸ்யமாக சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
படித்து முடித்து வேலைக்கு போகாமல், நண்பர்களுடன் ஊர் சுற்றி, தண்ணி அடித்து பாத்தாத குறைக்கு ஒரு பெண்ணை காதலித்து கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் கதை இது. ஜீவாவாக கார்த்தி, பிரியாவாக காஜல் அகர்வால். கார்த்தி தான் தோழி ஒருவரின் திருமனத்தின் போது காஜலை சந்திக்கிறார். கண்டதும் காதல். அவளிடன் தான் காதலை சொல்ல அவர் செய்யும் வேலைகள் நம்மை ரசிக்க வைக்கின்றது. இந்த காட்சிகள் இடைவேளை வரை தான். இடைவேளைக்கு அப்புறம் நாயகியை திரையில் பார்க்க முடிவதில்லை.
படத்தில் பாடல்கள் அளவோடு இருப்பது ஒரு பலமாக தோன்றுகிறது. மொத்தமே 3 பாட்டு தான் என்று நினைக்கிறேன். இடைவேளைக்கு முன் 2 பட்டு. இடைவேளைக்கு அப்புறம் ஒரு சோக பாட்டு. படத்தின் குறிப்பிடத் தக்க விஷயம் என்றாள் அது வில்லன்கள் தான். ரஜினி படத்தில் வருவது போல ஹீரோவை விட வில்லன்களுக்கு இதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. அதீத வன்முறை படத்தில் இருக்கிறது. அதனால் குழந்தைகள் இந்த படத்திற்க்கு அழைத்து செல்வது கேள்விக்குறியே.
வில்லனின் நண்பன் ஒருவன் தான் காதலிக்கும் பெண் ஒருவரை கடத்தி திருமணம் செய்ய நினைத்து தன்னுடைய வில்லன் நண்பனிடன் உதவி கேட்கிறான். அவர்கள் அந்த பெண்ணை கடத்த ஒரு கால் டாக்ஸி எடுக்கிறார்கள். அந்த கால் டாக்ஸி டிரைவர் தான் கார்த்தியின் அப்பா ஜெயப்ரகாஷ். இந்த விஷயம் தெரிந்த அவர் இதற்க்கு தன்னால் உதவி செய்ய முடியாது என்று சொல்லி விடுகிறார். ஒருவழியாக அவரை சமாளித்து வரும் அவர்கள், அந்த பெண்ணையும் அந்த பையனையும் தங்களுடைய அறையில் தங்க வைக்கிறார்கள்.
சபல புத்தி உடைய ஒரு நண்பர் அந்த காதலர்களுக்குள் நடக்குக்ம் காசமுசாவை பார்த்து இவனுக்கு மூடு மாற அந்த பெண்ணை கற்பழித்து சண்டைக்கு வந்த அந்த பெண்ணின் காதலனையும் கொலை செய்கிறார்கள். பிணத்தை துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசி விடுகிறார்கள். இந்த கொலைக்கு சாட்சி என்று வந்தால் அது டாக்ஸி டிரைவர் ஜெயப்பர்காஷாக தான் இருக்க முடியும் என்று அவரையும் கொலை செய்ய நினைத்து கொலையும் செய்து விடுகிறார்கள்.
பிறகு நாயகன் நாயகன் இவர்களை கண்டுபிடித்து பழி வாங்குவதே கதை.
இந்த படத்தில் லாஜிக் எதிர்பார்ப்பது தப்பு என்று எனக்கு தெரியும். இருந்தாலும் அதை ( லாஜிக்கை )எழுப்பி விட்ட காட்சி என்றால் அது கிளைமாக்ஸ் இல் வரும் சண்டை காட்சி தான். தொழில் முறை தாதாவாக இருக்கும் ஒருவரையும் அவருடைய அடியாள்களையும் அசாதாரணமாக கொலை செய்யும் வில்லன்கள், ஏனோ ஹீரோவிடம் அநியாத்துக்கு அடி வாங்கி சாகிறார்கள். இதை தவிர மத்தபடி எனக்கு எந்த பெரிய ஓட்டையும் என்னோட கண்ணுக்கு தெரியவில்லை.
ஒரு வேலை உங்களுக்கு நேரம் இருந்தால் இந்த படத்தை போயி பாருங்க... மத்த படி வேற ஒண்ணும் பெரிய விஸேஷம் இல்லை படத்தில்.
Tuesday, July 13, 2010
சென்னையில் விரைவில் மிதிவண்டிக்கு தனி வழி
சென்னையில் மிதிவண்டிகளுக்கு என்று தனியே பிரத்யேக பாதை அமைக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதற்க்கு சோதனை அடிப்படையில் முதலில் இந்த திட்டம் அண்ணா நகர் பகுதியில் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது.
வாகன நெரிசல் மிகுந்த சென்னை மாநகரத்தில் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்களுக்கே இங்கு வழி இல்லாது இருக்கும் போது, மிதிவண்டி ஓட்டுனர்களின் பாடு சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதிலும் நமது ஆட்டோ ஓட்டுனர்களின் அத்கலத்தால் பாதி விபத்துகள் நிகழ்வாதாக பலர் சொல்வதுண்டு. இந்நிலையில் மிதிவண்டி ஓட்டுனர்களுக்கு என்று தனி பாதை அமைப்பது என மாங்கராசி நிர்வாகம் முடிவு செய்துள்ளது வரவேற்க்க தக்கது.
Sunday, May 30, 2010
மலரும் நினைவுகள் - இலங்கை வானொலி
ஒரு காலத்தில், அதாவது 90 ஆரம்பம் 95களில் தமிழ் திரைப்பட பாடல்களை கேட்பது என்பது குதிரை கொம்பாக இருந்தது. ஒன்று நாம் ஆடியோ காசட் பணம் கொடுத்து வாங்க வேண்டும், இல்லை என்றால் ஏதாவது ஒரு வானொலி நிலையத்தில் பாடல்களி ஒலிபரப்பும் போது கேட்டுக் கொள்ள வேண்டும்.







